Thursday 12 December 2019

சங்கம் மீட்போம் - வாசுதேவன்

வாசுதேவன்  கே.


சங்கம் மீட்போம் அணியில் பொருளாளர் பொறுப்புக்குப் போட்டியிடும் திரு வாசுதேவன் அவர்களை அறியாத சங்க உறுப்பினர்களே இருக்க முடியாது. இன்றைய தேதியில் தில்லியில் நாடக வெளியில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரே நாடக இயக்குநர் இவர் மட்டுமே. அவருடைய அடையாளமா நாடகம்தான் என்றாகி விட்டது.

 
மைய அரசில் உயர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர். இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தில் பொறுப்புகள் வகித்தவர். எழுத்தாளர், பேச்சாளர், நாடக ஆசிரியர். தமிழிலும் இந்தியிலும் இதுவரை 13 நாடகங்களை இயக்கி மேடையேற்றியுள்ளார். தமிழ்ச் சங்கத்தில் மட்டும் இதுவரை பத்து நாடகங்களை மேடை ஏற்றியவர். தில்லியின் நாடகக் கலைஞர்களைக் கொண்டு தமிழகத்தில் சென்னையிலும் மேடையேற்றியவர்.




நாடகங்களைப் பற்றிய புகைப்படங்களும் விமர்சனங்களுமே இவரைப்பற்றிப் பேசும். 




இன்று தமிழ்ச் சங்கத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பலரும் இவருடைய நாடகங்களின் மூலம் தமிழர்கள் மத்தியில் கூடுதல் அறிமுகம் பெற்றவர்கள்தான் என்பதைக் குறிப்பிட வேண்டும்.

No comments:

Post a Comment